அமெரிக்கா செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சிகிச்சைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். அதன் பிறகு 3 ஆண்டுகள் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் படங்களில் நடித்து வந்த ரஜினி கடந்த மாதம் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக கூறினார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்தது ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக ரஜினியின் இந்த மாறுபட்ட முடிவுகள் குறித்து பலரும் பலவிதமாக கருத்து கூறி வருகின்றனர். ஆனால் ரஜினி அரசியலுக்கு வராததற்கு காரணம் உடல்நிலைதான் காரணம் என அவரே தெரிவித்திருந்தார். ஆனால் அதனை ஏற்க மறுக்கும் அவரது ஆதரவாளர்கள், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது வீட்டின் முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு பின் ரஜினி தொடர்ந்து மனச்சோர்வு இருந்துவருவதாக தெரிகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததாலும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாததாலும் ரஜினி மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிகிச்சைக்காக அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனை செய்து கொண்டு, அங்கேயே சில நாட்கள் தங்கி ரஜினி சிகிச்சை எடுக்கவிருக்கிறார். அண்ணாத்த படப்பிடிப்பை பிப்ரவரியில் மீண்டும் தொடங்கவுள்ளது. அதற்குள் ரஜினி அமெரிக்கா சென்றுவிட்டு சென்னைக்கு வந்துவிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.