ரஜினிகாந்த் அனுமதியோடுதான் கேளம்பாக்கம் சென்றாரா? – விசாரணை நடத்தப்படும் என்று கமிஷனர் உறுதி

 

ரஜினிகாந்த் அனுமதியோடுதான் கேளம்பாக்கம் சென்றாரா? – விசாரணை நடத்தப்படும் என்று கமிஷனர் உறுதி

நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்துக்கு உரிய அனுமதியோடு சென்றாரா என்பது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அனுமதியோடுதான் கேளம்பாக்கம் சென்றாரா? – விசாரணை நடத்தப்படும் என்று கமிஷனர் உறுதிதமிழ்நாட்டில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு மாவட்டத்தை விட்டு இன்னொரு மாவட்டம் செல்ல அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்த படி கார் ஓட்டிக்கொண்டு கேளம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய பங்களாவுக்கு சென்றது தொடர்பான படம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

ரஜினிகாந்த் அனுமதியோடுதான் கேளம்பாக்கம் சென்றாரா? – விசாரணை நடத்தப்படும் என்று கமிஷனர் உறுதி
சென்னை மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உரிய அனுமதியோடு ரஜினிகாந்த் சென்றாரா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்துக்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா, சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா என்பது குறித்து விசாரணை செய்யப்படும்” என்றார்.