‘கொரோனாவுக்கு முன் வரை அரசியலுக்கு வருவதில் ரஜினி உறுதியாகதான் இருந்தார் ஆனா இப்ப’- ரஜினியின் சகோதரர்

 

‘கொரோனாவுக்கு முன் வரை அரசியலுக்கு வருவதில் ரஜினி உறுதியாகதான் இருந்தார் ஆனா இப்ப’- ரஜினியின் சகோதரர்

நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளிவந்தது. அதில், “கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்க சொன்னாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image

இதுகுறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்” என்று விளக்கமளித்தார்.

‘கொரோனாவுக்கு முன் வரை அரசியலுக்கு வருவதில் ரஜினி உறுதியாகதான் இருந்தார் ஆனா இப்ப’- ரஜினியின் சகோதரர்

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணா அளித்த பேட்டியில், “கொரோனாவுக்கு முன் அரசியலில் கட்சி தொடங்குவதில் ரஜினி உறுதியாக இருந்தார். கொரோனா காரணமாகவே கட்சி பெயர், கொடி அறிவிப்பது தள்ளிப்போனது. இது கொரோனா காலம் என்பதால் எனது தம்பியின் உடல்நலனே முக்கியம். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருப்பது அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.