மாஸ்க் அணிந்து காரில் எங்கே சென்றார் ரஜினி?- புதிருக்கு விடை கிடைத்தது

 

மாஸ்க் அணிந்து காரில் எங்கே சென்றார் ரஜினி?- புதிருக்கு விடை கிடைத்தது

முகக்கவசம் அணிந்து கார் ஓட்டியபடி ரஜினிகாந்த் எங்கே சென்றார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் `அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குநர் சிவா. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே இருந்து வந்த ரஜினிகாந்த், கொரோனா பிரச்னை முழுவதும் முடிந்த பின்னர் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழுவிடம் அறிவுறுத்தினார். இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே அமிதாப்பச்சன், சிரஞ்சீவி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். பிரதமர் சொன்னபடி வீட்டின் வெளியே வந்து விளக்கேற்றியது உள்ளிட்ட ஒரு சிலவற்றிற்காக மட்டுமே வெளியில் தலை காட்டினார் ரஜினிகாந்த்.

மாஸ்க் அணிந்து காரில் எங்கே சென்றார் ரஜினி?- புதிருக்கு விடை கிடைத்தது

இந்த சூழ்நிலையில் முதல்முறையாக நேற்று மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் முகக்கவசத்துடன் லம்போர்கினி கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது. முகக்கவசம் அணிந்த புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறை என்பதாலும், ஓட்டுநர் இல்லாமல் அவரே காரை ஓட்டிச் சென்றதாலும் ரஜினிகாந்த் எங்கு சென்றிருப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க ரஜினிகாந்த் சென்றுள்ளார். அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர். அங்கு காரிலிருந்து இறங்கி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.