நீதிமன்றத்தில் பின்வாங்கிய ரஜினிகாந்த்! மனு தள்ளுபடி

 

நீதிமன்றத்தில் பின்வாங்கிய ரஜினிகாந்த்!  மனு தள்ளுபடி

நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி ரூ.6 லட்சம் செலுத்துமாறு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பொதுமுடக்க நாட்களில் மண்டபம் வாடகைக்கு விடப்படவில்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்யக்கோரி ரஜினி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த மனுவில், கடந்த 23ம் தேதி சொத்துவரி குறித்து சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதற்கு எந்த வித பதிலும் வரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை வாபஸ் பெற அனுமதிக்ககோரி மனுதாக்கல் செய்ய ரஜினி தரப்பில் செய்யப்பட்டது,

நீதிமன்றத்தில் பின்வாங்கிய ரஜினிகாந்த்!  மனு தள்ளுபடி

ராகவேந்திரா மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சியால் விதிக்கப்பட்ட ரூ. 6.50 லட்சம் சொத்து வரியை குறைக்க கோரிய ரஜினி மனு வாபஸ் பெறுவதற்கான மெமோ தாக்கல் செய்யப்பட்டது. ரஜினியின் வாபஸ் மெமோவை ஏற்றுக்கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக ரஜினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.