‘ரஜினி கட்சியின் பெயரை தலைமை அறிவிக்கும்’ – ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

 

‘ரஜினி கட்சியின் பெயரை தலைமை அறிவிக்கும்’ – ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

ரஜினியின் கட்சி மற்றும் சின்னம் குறித்த தகவல்களை கட்சியின் தலைமை அறிவிக்கும் என ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். கட்சி குறித்த அனைத்து விவரங்களையும் டிச.31ம் தேதி அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ரஜினியின் அரசியலும் பிரவேசம் உறுதியானதால் குஷியில் இருக்கும் ரசிகர்கள், 31ம் தேதி ரஜினியின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர்.

‘ரஜினி கட்சியின் பெயரை தலைமை அறிவிக்கும்’ – ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

அதே வேளையில் கட்சி பணியில் தீவிரமாக இறங்கி விட்டார் ரஜினி. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் இணைந்து முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். ரஜினி தனது கட்சியை ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் பதிவு செய்திருப்பதாகவும் அவருக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் இன்று காலை தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரஜினியின் கட்சி பெயர் சின்னம் பற்றி தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம் சுதாகர் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.