மக்கள் ஆதரவு சுனாமி மாதிரி வர வாய்ப்புள்ளதா… கட்சி தொடங்க தீவிரமாக யோசிக்கும் ரஜினி!

 

மக்கள் ஆதரவு சுனாமி மாதிரி வர வாய்ப்புள்ளதா… கட்சி தொடங்க தீவிரமாக யோசிக்கும் ரஜினி!

தான் கட்சித் தொடங்குவதாக இருந்தால் மக்கள் ஆதரவு சுனாமி மாதிரி தன்னெழுச்சியாக வர வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக அதற்கு தற்போது வாய்ப்பில்லை என்ற நிலையில் கட்சி தொடங்குவது பற்றி ரஜினிகாந்த் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவர் ஆலோசித்து வருகிறார், இப்போது வந்துவிடுவார், அப்போது வருவார் என்று தொடர்ந்து பேட்டி, பேச்சுக்கள்

மக்கள் ஆதரவு சுனாமி மாதிரி வர வாய்ப்புள்ளதா… கட்சி தொடங்க தீவிரமாக யோசிக்கும் ரஜினி!

வருகிறதே தவிர ரஜினியிடம் இருந்தோ, அல்லது அவரது சார்பில் அதிகாரப்பூர்வமாகவோ இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
அரசியலுக்கு வருவது உறுதி, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ரஜினி அறிவித்திருந்தார். ஆனால் மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே வருவேன். மக்கள் தன்னெழுச்சியாக வர வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாக மக்கள் நினைக்க வேண்டும். தனக்கு வயதாகிவிட்டது, இந்த முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால் அடுத்த முறை பார்க்கலாம் என்று இருக்க முடியாது. வந்தால் வின்னராக இருக்க வேண்டும் என்று ரஜினி கருதுகிறார்.

மக்கள் ஆதரவு சுனாமி மாதிரி வர வாய்ப்புள்ளதா… கட்சி தொடங்க தீவிரமாக யோசிக்கும் ரஜினி!


ஆனால் அதற்கான சூழல் தற்போது இல்லை. கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் முடங்கிப் போய் உள்ளனர். தமிழக அரசு கொரோனா நிவாரணம், தடுப்புப் பணிகள் என்று மிகப்பெரிய ஸ்கோர் செய்துள்ளது. பதிலுக்கு தன் தொண்டர்களின் கைகாசைப் போட்டு மக்களுக்கு உதவிகள் செய்து தி.மு.க-வும் முடிந்த வரை முயற்சித்து வந்துள்ளது. ரஜினி ரசிகர் மன்றத்தினரும் உதவிகள் செய்துள்ளனர். ஆனால், இந்த இரு பெரும் கட்சிகளுக்கு மத்தியில் அது மிகச் சிறயதாகவே உள்ளது. இந்த நிலையில் மக்கள் எழுச்சியை எதிர்பார்ப்பது வாய்ப்பில்லை.

மக்கள் ஆதரவு சுனாமி மாதிரி வர வாய்ப்புள்ளதா… கட்சி தொடங்க தீவிரமாக யோசிக்கும் ரஜினி!


மேலும் இந்த நேரத்தில் கட்சித் தொடங்கி, ரசிகர்களுக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு வந்துவிடக் கூடாதே என்ற கவலையும் ரஜினிக்கு உள்ளது. இதை எல்லாம் ரஜினி தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் சொல்லி கட்சி தொடங்குவது பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். வெற்றி நிச்சயம் என்று உறுதியானால் மட்டுமே களம் இறங்கும் ஐடியாவில் ரஜினி உள்ளார். எனவே, ரஜினிகாந்த் இந்த தேதியில் கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்று வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவார் அதை அவரே அறிவிப்பார். அதுவரை ரசிகர்கள், பொதுமக்கள் காத்திருக்க வேண்டும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.