காவல்துறை அனுமதியுடன் நாளை போராட்டம் நடத்தும் ரஜினி ரசிகர்கள்

 

காவல்துறை அனுமதியுடன் நாளை போராட்டம் நடத்தும் ரஜினி ரசிகர்கள்

நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டி ரசிகர்களின் போராட்டத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதனை வலியுறுத்தி ரஜினி ரசிகர்கள் நாளை காலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

காவல்துறை அனுமதியுடன் நாளை போராட்டம் நடத்தும் ரஜினி ரசிகர்கள்

ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர், ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் ராம்தாஸ் தலைமையில் அறப்போராட்டம் நடைபெற உள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ரஜினி சவுந்தர் மற்ற ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளங்கில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அறப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.