‘அரசியலுக்கு வாங்க ரஜினி’.. ரசிகர்கள் இன்று போராட்டம்!

 

‘அரசியலுக்கு வாங்க ரஜினி’.. ரசிகர்கள் இன்று போராட்டம்!

நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளனர்.

பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரவிருப்பதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த்தின், அரசியல் பிரவேசம் முடிவுக்கு வந்து விட்டது. இவர் அரசியலுக்கு வருவாரா.. மாட்டாரா? என்று ரசிகர்களும் மக்களும் குழம்பி போயிருந்த சூழலில் தான், தான் ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. ரசிகர் மன்றத்துடன் ஆலோசனை, நிர்வாகிகளுடன் ஆலோசனை என கட்சிப் பணியில் தீவிரமாக களமிறங்கிய ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்று வந்த பின்னர், உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கவில்லை என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

‘அரசியலுக்கு வாங்க ரஜினி’.. ரசிகர்கள் இன்று போராட்டம்!

ரஜினியின் அரசியல் வருகைக்காக பல ஆண்டுகளாக காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. உடல்நிலை காரணமாக தான் எடுத்த இந்த முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய ரஜினி, இதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டார். இருந்தாலும், ரஜினியின் இந்த முடிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. மீண்டும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

‘அரசியலுக்கு வாங்க ரஜினி’.. ரசிகர்கள் இன்று போராட்டம்!

இந்த நிலையில், ரஜினியை அரசியலுக்கு வருமாறு கோரிக்கை விடுத்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் இந்த போராட்டத்தில் பங்கேற்க, தற்போதே வள்ளுவர் கோட்டத்திற்கு ரசிகர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். ரசிகர்கள் போராட்டம் நடத்தக்கூடாது என ரஜினி மக்கள் மன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.