“ஓட்டுன்னு ஒன்னு போட்டா அது எங்க தலைவருக்கு தான்” : மனைவிக்கு கூட வாக்களிக்காமல் காத்திருக்கும் ரஜினி ரசிகர்!

 

“ஓட்டுன்னு ஒன்னு போட்டா அது எங்க தலைவருக்கு  தான்” : மனைவிக்கு கூட வாக்களிக்காமல் காத்திருக்கும் ரஜினி ரசிகர்!

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். ரஜினியின் தீவிர விசுவாசியான இவர் ரஜினி அரசியலுக்கு வந்து, அவர் தேர்தலில் நின்றால் தான், தான் ஓட்டு போடுவேன் என்று வைராக்கியமாக உள்ளார்.

“ஓட்டுன்னு ஒன்னு போட்டா அது எங்க தலைவருக்கு  தான்” : மனைவிக்கு கூட வாக்களிக்காமல் காத்திருக்கும் ரஜினி ரசிகர்!

இதுகுறித்து பிரபல தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், நான் சிறுவயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகன். அவர் ஆன்மீகம் எண்ணம் என்னை இன்னும் அவர் மீது உள்ள அன்பை பலப்படுத்தியது. அவர் அரசியலுக்கு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். காமராஜர், எம்ஜிஆர் விட்டு சென்ற இடத்தை ரஜினியினால் மட்டுமே நிரப்ப முடியும். என் இதுவரை 15 தேர்தலை கடந்துள்ளேன். ஆனாலும் ரஜினி தேர்தலில் போட்டியிட்டால் தான் வாக்களிக்க வேண்டும் என்று உள்ளேன்.

“ஓட்டுன்னு ஒன்னு போட்டா அது எங்க தலைவருக்கு  தான்” : மனைவிக்கு கூட வாக்களிக்காமல் காத்திருக்கும் ரஜினி ரசிகர்!

இதுவரை நான் ஒருமுறை கூட வாக்களிக்கவில்லை. என் மனைவி தேர்தலில் நின்ற போது கூட நான் ஓட்டு போடவில்லை. வாக்களித்தால் ரஜினிக்கு தான் வாக்களிப்பேன். ரஜினிகாந்த் தற்போது அரசியல் கட்சி தொடங்கவுள்ளது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிக்கு வாக்களிப்பேன்” என்றுநெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

“ஓட்டுன்னு ஒன்னு போட்டா அது எங்க தலைவருக்கு  தான்” : மனைவிக்கு கூட வாக்களிக்காமல் காத்திருக்கும் ரஜினி ரசிகர்!

நடிகர் ரஜினியின் அரசியல் வருகைக்காக ரசிகர் ஒருவர் தனது வாழ்நாளில் 28ஆண்டுகள் காத்திருந்து வாக்களிக்க இருப்பது ரஜினியின் கவனத்திற்கு செல்லுமாயின் ரஜினி தனது அரசியல் தாமதத்தை எண்ணி வருந்துவார் என்றே தோன்றுகிறது.