ராஜேஷ் தாஸ் பாலியல் புகார்: செங்கல்பட்டு எஸ்பி வேறு இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார்!

 

ராஜேஷ் தாஸ் பாலியல் புகார்: செங்கல்பட்டு எஸ்பி வேறு இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார்!

திருச்சி, புதுக்கோட்டையில் முதல்வர் பழனிசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அவரது பாதுகாப்புக்காக சென்னையில் இருந்து சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்றிருந்த நிலையில், அவருடன் பெண் ஐபிஎஸ் அதிகாரி உட்பட பலர் சென்றிருந்தனர். பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில், காரில் ராஜேஷ்தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ராஜேஷ் தாஸ் பாலியல் புகார்: செங்கல்பட்டு எஸ்பி வேறு இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார்!

சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி, டிஜிபி திரிபாதியிடம் ராஜேஷ் தாஸுக்கு எதிராக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. காத்திருப்பு பட்டியலுக்கும் மாற்றப்பட்டார். ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக டிஜிபி திரிபாதி அறிவித்தார்.

ராஜேஷ் தாஸ் பாலியல் புகார்: செங்கல்பட்டு எஸ்பி வேறு இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார்!


இந்த வழக்கில் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனும் சேர்க்கப்பட்டார். ராஜேஷ் தாஸுக்கு எதிராகப் புகார் கொடுக்க தடுத்ததாகக் கூறி அவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இச்சூழலில் அவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.