ஸ்டாலின் ஒரு நகைச்சுவை அரசியல் தலைவர் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

ஸ்டாலின் ஒரு நகைச்சுவை அரசியல் தலைவர் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக 20 லட்சம் மதிப்பில் புதியதாக உந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “இந்தியாவிற்காக பேசுபவர்களுக்கு இந்திய அரசும் தமிழக அரசும் துணை நிற்கும். 1947 ஆம் ஆண்டில் இருந்த ராணுவம் தற்போது கிடையாது. பிரதமர் மோடி தலைமையில் இந்திய ராணுவம் வலுவாக உள்ளது” என தெரிவித்தார்.

ஸ்டாலின் ஒரு நகைச்சுவை அரசியல் தலைவர் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கொரோனா விவகாரத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகவும், பாதிப்பு குறித்து இறைவன் மீது பழிபோடுவதும் கண்டனத்துக்கு உரியது என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், “எடப்பாடி ஆட்சி நடக்கப் போய் தான் நாம் இங்கு நிற்கிறோம். திமுக ஆட்சி நடந்து இருந்தால் ஒருவர் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இறப்பவர்களை மறைக்க முடியாது. ஸ்டாலின் தினமும் வெற்று அறிக்கை விடுகிறார். வழியில்லாமல் முழிக்கிறார். நகைச்சுவை அரசியல் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். எடப்பாடி பாலாக கொடுக்கிறார் அதனை ஸ்டாலின் விஷமாக கக்குகிறார். எதிர்க்கட்சிகள் கூறும் அறிவுரைகளை முதல்வர் கண்டிப்பாக கேட்பார். நல்லவைகளை சிறு குழந்தைகள் சொன்னாள் கூட முதல்வர் ஏற்றுக்கொள்வார். ஸ்டாலின் வார்த்தைகளை அரசியல் அரங்கிற்குள் இருப்பவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என தெரிவித்தார்.