விசில் பறக்கணும், தடி பிடிக்கணும், செல்பி எடுக்கணும்- ராஜேந்திர பாலாஜி அதிரடி

 

விசில் பறக்கணும், தடி பிடிக்கணும், செல்பி எடுக்கணும்- ராஜேந்திர பாலாஜி அதிரடி

விருதுநகரில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்,

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “இந்த நாள் தமிழகத்தின் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். சொந்த மொழிக்காக உயிர் நீத்தவர்களுக்காக வீரவணக்கநாள், பொதுக்கூட்டம் நடத்த கூடிய தகுதியுடைய ஒரே கட்சி அதிமுகதான். மொழிப்போரில் ஈடுபடுத்திய மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்கள் காளிமுத்து போன்ற அதிமுகவினர்தான். திமுகவினருக்கு வரலாறு தெரியாது ஏதோ ஒன்றை கூறி வீரவணக்க நாள் கூட்டம் நடத்துவார்கள். மொழிக்காக போராடியவர்களை திமுக புறக்கணித்துவிட்டது, அவர்களை தூக்கி எரிந்து விட்டது. மொழிக்காக போராடிய முன்னாள் சபாநாயகர் காளிமுத்து போன்றவர்கள் அதிமுகவில் இருந்து மறைந்தவர்கள்.

விசில் பறக்கணும், தடி பிடிக்கணும், செல்பி எடுக்கணும்- ராஜேந்திர பாலாஜி அதிரடி

டூவீலர்களில் கட்சி கொடி கட்டி ஊர்வலமாக மாணவரணியினர் என்னை அழைத்து வந்தார்கள், விசில் சத்தம் கேட்க வேண்டும், ஒரு கையில் கொடி பிடிக்க வேண்டும், ஒரு கையில் தடி பிடிக்க வேண்டும், செல்பி எடுக்க ஓடி வர வேண்டும் அப்போது அங்கு கட்சி வலுவாக உள்ளது என அர்த்தம், விருதுநகரில் அதிமுக வலுவாக உள்ளது, விருதுநகர் அதிமுகவின் எஃகு கோட்டை, திமுகவினர் வியாபாரிகள். கலைஞர் தலைமையிலான திமுக இல்லை தற்போது உள்ளது வியாபார திமுக. விருதுநகரில் மருத்துவ கல்லூரி கொண்டுவந்தது அதிமுக அரசு. ஆனால் இதற்கும் மருத்துவ கல்லூரி கொண்டுவந்த ஸ்டாலினுக்கு நன்றி என திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டுவார்கள். திமுகவினர் சொல்வதெல்லாம் பொய். வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு சம்பட்டி அடி கொடுப்போம் என உறுதி மொழி எடுப்போம்” எனக் கூறினார்.