மட்டன் சாப்பாடு போட்டு அரசியல் பண்ணும் இயக்கம் அதிமுக- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

மட்டன் சாப்பாடு போட்டு அரசியல் பண்ணும் இயக்கம் அதிமுக- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக கூட்டம் போட்டாலே அனைவருக்கும் மட்டன் சாப்பாடு தான், கெடாவெட்டு தான். அனைவருக்கும் சாப்பாடு போட்டு அரசியல் பண்ணும் இயக்கம்தான் அதிமுக. திமுக ஒரு ஐம்பெரும் தலைவர்கள் மட்டுமே கொண்டுள்ள கட்சி, அந்த கட்சி வடநாட்டு காரரை நம்பி தான் உள்ளது. அவர் சொன்னால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?

மட்டன் சாப்பாடு போட்டு அரசியல் பண்ணும் இயக்கம் அதிமுக- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தேர்தலில் ஜெயிக்கிற வித்தையெல்லாம் எங்களுக்கும் தெரியும். திமுகவிற்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் யாருடைய ஓட்டும் கிடைக்காது. வாடி வதங்கி நொந்து நூலாகி சாகும்வரை திமுகவிற்கு ஓட்டுப் போட நினைப்பவர்கள் மட்டும் தான் ஓட்டு போடுவார்கள். ஸ்டாலினின் திமுக பத்துக்கு பத்து அறையில் உள்ளது, அண்ணா ஆரம்பித்த திமுக தற்போது இல்லை

ஸ்டாலின் வைத்திருக்கும் பெயரே தமிழ் பெயர் கிடையாது. ரஷ்ய நாட்டின் பெயரை வைத்துக்கொண்டு தமிழைப் பற்றிப் பேசும் யோக்கியதை ஸ்டாலினுக்கு கிடையாது. தமிழர்களைப் பற்றி பேசும் உரிமை அதிமுக தொண்டர்கள் மட்டுமே உண்டு. தமிழருக்கும் தமிழுக்கும் துரோகம் செய்து தமிழை விற்றுப் பிழைக்கும் கூட்டம்தான் திமுக” என கடுமையாக விமர்சித்தார்.