“நீ எங்கனாலும் நில்லு நான் செய்ய வேண்டியத செய்வேன்” – ராஜேந்திர பாலாஜிக்கு ராஜவர்மன் நேரடி மிரட்டல்!

 

“நீ எங்கனாலும் நில்லு நான் செய்ய வேண்டியத செய்வேன்” – ராஜேந்திர பாலாஜிக்கு ராஜவர்மன் நேரடி மிரட்டல்!

தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் 41 பேருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் இவர்கள் அனைவரும் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்தப் பக்கம் தாவலாமா அந்தப் பக்கம் தாவலாமா என்ற மதில் மேல் பூனையாக இருக்கின்றனர். சிலர் வெளிப்படையாகவே அவருக்கு தேர்தல் பணிகளைச் செய்ய முடியாது என அறிவித்துவிட்டனர்.

“நீ எங்கனாலும் நில்லு நான் செய்ய வேண்டியத செய்வேன்” – ராஜேந்திர பாலாஜிக்கு ராஜவர்மன் நேரடி மிரட்டல்!

அந்த வரிசையில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் சற்று வித்தியாசமான பாணியைக் கடைப்பிடித்திருக்கிறார். நேற்று மாலை சீட் மறுக்கப்பட்ட மாத்திரத்தில் இன்று காலை தடபுடலாக அமமுகவில் இணைந்துவிட்டார். எப்போடா என்று காத்திருந்த தினகரனும் அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். சீட் மறுக்கப்பட்டதற்கு ராஜேந்திர பாலாஜியைக் குற்றஞ்சாட்டிய அவர், சாபமும் விட்டார்.

“நீ எங்கனாலும் நில்லு நான் செய்ய வேண்டியத செய்வேன்” – ராஜேந்திர பாலாஜிக்கு ராஜவர்மன் நேரடி மிரட்டல்!

சசிகலாவுக்கு துரோகம் செய்தவாக தலைமையையும் விமர்சித்தார். இதையடுத்து அதிமுக அவரை அதிரடியாக நீக்கியது. தற்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராஜவர்மன், ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றார். அதேபோல ராஜேந்திர பாலாஜி எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்பேன் என பகீரங்கமாக சவால் விடுத்திருக்கிறார்.