டிவில்லியர்சின் ருத்ரதாண்டவம்: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி!

 

டிவில்லியர்சின் ருத்ரதாண்டவம்: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய 33வது ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ராஜஸ்தான் அணியிலிருந்து துவக்க ஆட்டக்காரர்களாக உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர் அதிரடியாக ஆடிய உத்தப்பா 42 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொருப்பாக ஆடி 57 ரன்கள் அடித்தார்.20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.

டிவில்லியர்சின் ருத்ரதாண்டவம்: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி!

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட வந்த பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பின்ச் மற்றும் படிக்கல் களமிறங்கினார். பின்ச் 14 ரன்களிலும், படிக்கல் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் கோலி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5 ஓவர்களில் 64 ரன்கள் வேண்டும் என்று நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். 22 பந்துகளில் 55 ரன்கள் விளாசி பெங்களூரு அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் பெங்களூரு அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கைப்பற்றியுள்ளது. மேலும் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.