நொளம்பூரில் ராஜஸ்தான் காவல் குழுவினர் கொடி அணிவகுப்பு!

 

நொளம்பூரில் ராஜஸ்தான் காவல் குழுவினர் கொடி அணிவகுப்பு!

சென்னை

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியில் இன்று ராஜஸ்தான் மாநில காவல் குழுவினர் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலையொட்டி, மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது.

நொளம்பூரில் ராஜஸ்தான் காவல் குழுவினர் கொடி அணிவகுப்பு!

இதன் ஒரு பகுதியாக சென்னை நொளம்பூர் பகுதியில் ராஜஸ்தானில் இருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள காவல் குழுவினர் மற்றும் சட்டம் – ஒழுங்கு காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில் துப்பாக்கி ஏந்திய ராஜஸ்தான் மாநில காவல்குழுவினர், தெருக்களில் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர்.

நொளம்பூரில் ராஜஸ்தான் காவல் குழுவினர் கொடி அணிவகுப்பு!

சின்ன நொளம்பூர் சாலையில் தொடங்கிய இந்த அணிவகுப்பானது, பாட சாலை தெரு, கஜலட்சுமி நகர் முதல் மற்றும் 2-வது தெருக்கள், பெருமாள் கோயில் தெரு, மாதா கோயில் தெரு மற்றும் மக்கள் அதிகம் கூடும் சந்திப்புகள் வழியாக சென்று, நொளம்பூர் யூனியன் ரோடு பகுதியில் முடிவடைந்தது.