ஒரே சமுகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்த நபர்… சிறுநீர் குடிக்க வைத்த கிராமத்தினர்!

 

ஒரே சமுகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்த நபர்… சிறுநீர் குடிக்க வைத்த கிராமத்தினர்!

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில், ஒரு நபர் தனது சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் உறவு வைத்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த நபரை சிறுநீர் குடிக்க வைத்து துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகவல்களின் படி, இந்த சம்பவம் குறித்து திங்கள்கிழமை இரவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து 6 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

ஒரே சமுகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்த நபர்… சிறுநீர் குடிக்க வைத்த கிராமத்தினர்!

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்னர், நெட்டிசன்கள் இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் காவல்துறை மற்றும் முதல்வரை ட்விட்டரில் டேக் செய்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

சிரோஹி மாவட்டத்தில் உள்ள சர்தார்புரா என்ற கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த நபர் கிராமவாசிகளால் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். “அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் அந்த நபருக்கு தண்டனை வழங்க விரும்பிய கிராமத்தினர் இத்தகைய செயலைச் செய்துள்ளனர்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.