ராஜஸ்தான்: காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! – முதல்வர் வீட்டில் நிற்கும் சொகுசு பஸ்கள்

 

ராஜஸ்தான்: காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! – முதல்வர் வீட்டில் நிற்கும் சொகுசு பஸ்கள்

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை உடைத்து ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சித்து வரும் நிலையில் அசோக் கெலாட்டுக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

ராஜஸ்தான்: காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! – முதல்வர் வீட்டில் நிற்கும் சொகுசு பஸ்கள்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதை விட, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிப்பவர்களிடமிருந்து எம்.எல்.ஏ-க்களை காப்பாற்றுவது மிகக் கடினமாக மாறி வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் மிக ஜோராக நடந்து முடிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க-வின் சூழ்ச்சி தற்போது ராஜஸ்தானில் நிலை கொண்டுள்ளது.

ராஜஸ்தான்: காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! – முதல்வர் வீட்டில் நிற்கும் சொகுசு பஸ்கள்முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட் தரப்பு எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட பா.ஜ.க முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில் பா.ஜ.க-வின் முயற்சியைத் தோல்வியடைய செய்ய காங்கிரஸ் படாதபாடு பட்டு வருகிறது.
தற்போது முதல்வர் அசோக் கெலாட் தன்னுடைய இல்லத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் 107 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஆட்சி அமைக்க 101 எம்.எல்.ஏ தேவை என்ற நிலையில், அசோக்கெலட்டிடம் 107 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான்: காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! – முதல்வர் வீட்டில் நிற்கும் சொகுசு பஸ்கள்இந்த கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சொகுசு விடுதிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக சொகுசு பஸ்கள் முதல்வர் இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடந்து வருவதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் எப்படியாவது பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வேண்டும். மக்கள் விருப்பம் அதுவே. இதற்கு எந்த மாதிரியான முயற்சியை மேற்கொண்டாலும் தவறில்லை என்று பா.ஜ.க தொண்டர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.