இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

 

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

லங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த வாக்குப்பதிவில் நேற்று வாக்கு எண்ணிகை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ராஜபக்சேவின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன முன்னிலை வகுத்து, அக்கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்தது.

இறுதிகட்ட நிலவரப்படி மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி 60 சதவிகித வாக்குகளைப்பெற்று, 196 இடங்களில் 145 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.