சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவையில்லை – ராஜன் செல்லப்பா அதிரடி பேச்சு!

 

சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவையில்லை – ராஜன் செல்லப்பா அதிரடி பேச்சு!

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சசிகலாவின் தேவை இருக்காது என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேதி இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மதுரை ஆலங்குளம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பங்கேற்றார்.

சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவையில்லை – ராஜன் செல்லப்பா அதிரடி பேச்சு!

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக 3 சதவீத வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளது. 46 தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதனால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். முழு மனதுடன் பணியாற்றி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி காண்போம் என்றார். மேலும், சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது என்றும் அவர் துணையிருந்தால் தான் அதிமுக மீண்டெழும் என்ற நிலையில் இல்லை என்றும் தெரிவித்தார்.