சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது- எம்எல்ஏ ராஜன்செல்லப்பா

 

சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது- எம்எல்ஏ ராஜன்செல்லப்பா

சசிகலாவின் தயவு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தேவைப்படாது, அவர் வந்தால்தான் அதிமுக மீண்டெழும் என்ற நிலை இல்லை என சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது- எம்எல்ஏ ராஜன்செல்லப்பா

மதுரை ஆலங்குளம் பகுதியில் அதிமுக கிழக்கு கழக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா, ”உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மூன்று சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி அடைந்துள்ளது. குறிப்பாக 46 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை அடைந்துள்ளோம். அதனை கருத்தில் கொண்டு தொண்டர்கள் தீவிர களப்பணி ஆற்றி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வைக்க வேண்டும்.

கூட்டணி குறித்து தலைமை கழகம் முடிவே இறுதியானது. தலைமை அலுவலகத்தின் முடிவை முழுமனதாக ஏற்று தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றி வெற்றி காண்போம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த மிகப்பெரிய கட்டமைப்புடன் அதிமுக உள்ளது. அதனால் சசிகலாவின் தயவு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தேவைப்படாது. அவர்கள் துணை வந்தால் தான் அதிமுக மீளும் என்ற நிலை இல்லை” எனக் கூறினார்.