என்னை போன்று பள்ளியில் பல கறுப்பு ஆடுகள் இருக்கு- பாலியல் சர்ச்சை ஆசிரியர் ராஜகோபாலன்

 

என்னை போன்று பள்ளியில் பல கறுப்பு ஆடுகள் இருக்கு- பாலியல் சர்ச்சை ஆசிரியர் ராஜகோபாலன்

சென்னை கேகே நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்ரி தனியார் பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன். இவர் ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, ஆபாச படங்கள் இணையதள பக்கங்களை வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ராஜகோபாலன் கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் அம்பலமானது.

என்னை போன்று பள்ளியில் பல கறுப்பு ஆடுகள் இருக்கு- பாலியல் சர்ச்சை ஆசிரியர் ராஜகோபாலன்

இந்நிலையில், அவர் தற்போது போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “மாணவிகளின் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை தான். பள்ளியில் தன்னைப் போன்று மேலும் சில கருப்பு ஆடுகள் உள்ளனர்” என தெரிவித்துள்ளார். பாலியல் புகார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை ராஜகோபாலன் நீக்கி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.