மன்னிப்புலாம் கேட்க முடியாது! ஒழுங்க ஒரு கோடிய எடு!! மருத்துவரை மிரட்டும் ரைசா

 

மன்னிப்புலாம் கேட்க முடியாது! ஒழுங்க ஒரு கோடிய எடு!! மருத்துவரை மிரட்டும் ரைசா

மாடல் அழகியும், பிக் பாஸ் பிரபலமுமான நடிகை ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் ஜோடி சேர்ந்த இவர், தற்போது காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அண்மையில் ரைசா வில்சன், தோல் மருத்துவர் பைரவி முகப்பொலிவுக்கு செய்த dermal fillers சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாக பரபரப்பு புகார் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி ஒரு கோடி நஷ்ட ஈடும் கேட்டிருந்தார். ஆனால் மருத்துவர் பைரவியோ ரைசா மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், ரைசாவுக்கு ஏற்பட்டிருப்பது பக்க விளைவுகள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மன்னிப்புலாம் கேட்க முடியாது! ஒழுங்க ஒரு கோடிய எடு!! மருத்துவரை மிரட்டும் ரைசா

இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மருத்துவர்கள் போலியான விளம்பரங்கள் மூலம் அப்பாவி மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்காமல், பொதுமக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்வதாக நினைக்கிறேன். மேலும், மருத்துவத்துறை விதிமுறைகளை மீறி மக்களுக்கு மருந்து பரிந்துரைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் மருத்துவர்களின் செயல்கள் சட்டவிரோதமானவை. முக்கியமாக, சிகிச்சை தரும் நோயாளியின் அவசரச் சூழலில் உதவி கோரும்போது அதைப் புறக்கணிக்காமல் பதிலளிக்க வேண்டும்.

டாக்டர் பைரவி செந்தில் பல்வேறு சமூக வலைதளங்களில் விடுத்திருந்த விளம்பரங்களை வைத்தே, அழகை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட சில சிகிச்சைகளை செய்துகொள்ள அவரை நான் அணுகினேன். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே டாக்டர் பைரவி செந்திலும் அவரது பணியாளர்களும் என்னிடமிருந்து பணம் பிடுங்க எனக்குத் தவறான சிகிச்சைகளையே செய்து வந்தனர். அந்த சிகிச்சையால் என் உயிருக்கே ஆபத்து நேர்ந்தபோது டாக்டர் பைரவி செந்தில் எனக்கு அவசர சிகிச்சை அளிக்க மறுத்தார். மருத்துவர் ஆய்வு செய்தது உள்ளிட்ட என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் டாக்டர் பைரவி செந்திலின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் நான் என்பது தெளிவாகத் தெரியும். எனவே நான் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.

மன்னிப்புலாம் கேட்க முடியாது! ஒழுங்க ஒரு கோடிய எடு!! மருத்துவரை மிரட்டும் ரைசா

டாக்டர் பைரவி செந்தில் மற்றும் அவரது ஊழியர்களின் அலட்சியமான போக்கால் பாதிக்கப்பட்ட பெண் நான். எதிர்காலத்தில் யாரும் எனது வலியை அனுபவிக்கக் கூடாது. ஒரு நடிகையாக, எனது செயல்களால் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்துக்கு நான் பொறுப்பு என நினைக்கிறேன். எனவே, இனி அப்பாவி மக்கள் யாரும் டாக்டர் பைரவி செந்திலின் சிகிச்சையால் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய, தேசிய மருத்துவ ஆணையத்திடமும், தமிழக மருத்துவ கவுன்சிலிலும், டாக்டர் பைரவி செந்தில் மற்றும் மற்றவர்களுக்கு எதிராக நான் புகார் அளித்துள்ளேன். அவர்களிடம் சட்டப்படி விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணைக்குப் பின் அதிகாரிகளின் முடிவு தெரியவரும்.

மன்னிப்புலாம் கேட்க முடியாது! ஒழுங்க ஒரு கோடிய எடு!! மருத்துவரை மிரட்டும் ரைசா

கடைசியாக, தவறான சிகிச்சைக்காக டாக்டர் பைரவி செந்திலிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இந்தச் சட்ட நடவடிக்கையில் எனக்குக் கிடைக்கும் நஷ்ட ஈட்டை, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நன்கொடையாக அளிக்கவிருக்கிறேன். நீதித்துறையின் மீதிருக்கும் நம்பிக்கையுடன், மக்களுக்கு என்றுமே சிறந்த மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.