தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்!

 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்!

அத்துடன் இன்று சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் நாளை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ,ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.