இந்த 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

 

இந்த 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அவ்வப்போது மழை பெய்வது நிம்மதியை அளிக்கிறது. இருப்பினும் மழையால் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சமும் பரவலாக இருக்கிறது. நேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

இந்த 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கோவை, நீலகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.