இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!

சேலம், தர்மபுரி, ஈரோட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 4 நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் சேலம், தருமபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் சேலம், தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.