“இந்த பகுதிகளில் பிப் 22 ஆம் தேதி வரை மழை ” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

“இந்த பகுதிகளில் பிப் 22 ஆம் தேதி வரை மழை ” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“இந்த பகுதிகளில் பிப் 22 ஆம் தேதி வரை மழை ” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. அத்துடன் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கோவை, நீலகிரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

“இந்த பகுதிகளில் பிப் 22 ஆம் தேதி வரை மழை ” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகாலையில் சில இடங்களில் மழை பெய்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இவ்வாறு அறிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.