‘இந்த 4 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

 

‘இந்த 4 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னையி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘இந்த 4 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் , தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நெல்லை, குமரி ,தென்காசி, தூத்துக்குடி, ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் மழைபெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

‘இந்த 4 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

நாளை தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருகின்ற 14 மற்றும் 15ம் தேதிகளில் மேற்கு தொடர்சசி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த 4 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட ள் பகுதிகளில் காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை, அறந்தாங்கி ,கொத்தமங்கலம், சேந்தன்குடி, கீரமங்கலம், ஆலங்குடி, பகுதிகளில் மழை பெய்து வருகிறது, அதே போல் கண்டோன்மென்ட் ,பொன்மலைப்பட்டி ,எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட திருச்சி மாநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது