அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூரில் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 

அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூரில் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வடக்கு வங்ககடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி , அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை கடக்கக் கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூரில் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்கள் வறண்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் , வட கடலோர மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடன் சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். நாளை மறுநாள் மற்றும் 15 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூரில் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 13-ஆம் தேதி வரை தெற்கு வங்க கடல் மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அத்துடன் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.