சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை!

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை!

தென் மேற்கு பருவக்காற்று காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி தேனி, திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி,திருநெல்வேலி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியது.இந்நிலையில் சென்னை பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி நகர், அடையாறு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, போரூர்,கோயம்பேடு, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.