அடுத்த 3 மணிநேரத்தில் 8 தென் மாவட்டங்களில் மழை!

 

அடுத்த 3 மணிநேரத்தில் 8 தென் மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணிநேரத்தில் 8 தென் மாவட்டங்களில் மழை!

தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒட்டி வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்தவகையில் நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்,தேனி, மதுரை ,திண்டுக்கல் ,கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 3 மணிநேரத்தில் 8 தென் மாவட்டங்களில் மழை!

இந்நிலையில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்,மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.