தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

 

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , சேலம், கோவை , நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி ஆகிய 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வால்பாறையில் 11 செமீ, சின்னக்கல்லாரில் 9 செமீ, சோலையார், நடுவட்டத்தில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா,கர்நாடகா, கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடலோரத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.