அடுத்த 4 நாட்களுக்கு மழை : எந்த மாவட்டங்களில் தெரியுமா?

 

அடுத்த 4 நாட்களுக்கு மழை : எந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கோவை ,நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு மழை : எந்த மாவட்டங்களில் தெரியுமா?

குமரி கடல் பகுதியில் 1.5 முதல் 2.1 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, ஏனைய மாவட்டங்கள் ,புதுச்சேரி ,காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு மழை : எந்த மாவட்டங்களில் தெரியுமா?

வருகின்ற 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 81டிகிரி செல்சியஸ் பாரன்ஹீட்டை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.