தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் 12ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இன்று மற்றும் நாளை தென்கிழக்கு, மத்திய கிழக்கு, வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் வருகின்ற 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

அரபிக்கடல் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று முதல் 12ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.