தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வருகின்ற 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அளவாக சென்னை நந்தனத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், பூந்தமல்லி, சென்னை விமான நிலையம், கலவை, சாய்ராம் கல்லூரி மேற்கு தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூர் , திருவாலங்காடு, சோளிங்கர் , வேலூர் ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், கோத்தகிரி ஆகிய இடங்களில் இரண்டு சென்டி மீட்டர் மழையும், சென்னை நுங்கம்பாக்கம், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இன்று முதல் 12ஆம் தேதி வரை மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.