இந்த மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை!

 

இந்த மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை!

தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் மலைப்பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

இந்த மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக வருகின்ற 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

இந்த மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை!

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும்.

இன்றுமுதல் வருகின்ற 6ம் தேதி வரை தென் மேற்கு வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.