‘சென்னையின் பல இடங்களில் மிதமான மழை’.. அடுத்த சில மணி நேரம் மழை பெய்யக்கூடும்!

 

‘சென்னையின் பல இடங்களில் மிதமான மழை’.. அடுத்த சில மணி நேரம் மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘சென்னையின் பல இடங்களில் மிதமான மழை’.. அடுத்த சில மணி நேரம் மழை பெய்யக்கூடும்!

தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் நாகை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மேடவாக்கம், செம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடமேற்கு திசையில் இருந்து வீசும் கடல்காற்று காரணமாக அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.