என் மகன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததில் மகிழ்ச்சி- வீர மரணமடைந்தவரின் தாய்!

 

என் மகன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததில் மகிழ்ச்சி- வீர மரணமடைந்தவரின் தாய்!

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே நடைபெற்ற மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி என்பவர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். இதில், தெலங்கானாவின் சூர்யபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் பாபு என்ற ராணுவ கமெண்டோ அதிகாரியும் உயிரிழந்தார்.

இந்நிலையில் தனது மகனின் இறப்பு குறித்து செய்தியாளர்களிடம் உருக்கமாக பேட்டியளித்த சந்தோஷ் பாபுவின் தாய், “ஒரு தாயாக நான் மிகவும் வருந்துகிறேன். இருப்பினும் எனது மகன் நாட்டிற்காக போரிட்டு உயிர்த்தியாகம் செய்தான் என நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்” என கண்கலங்க தெரிவித்தார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “இந்திய வீரர்களின் உயிரிழப்பால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நாட்டிற்காக உயிர்த்தியாகம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.