பாதுகாவலர்கள் ஒடுக்குபவர்களாக மாறுவது மிகவும் மோசமான செயல்- ராகுல்காந்தி

 

பாதுகாவலர்கள் ஒடுக்குபவர்களாக மாறுவது மிகவும் மோசமான செயல்- ராகுல்காந்தி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்ட விவகாரத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், “காவலர்களின் மிருகத்தனமான இந்த செயல் கொடூரமான குற்றம். பாதுகாவலர்கள் ஒடுக்குபவர்களாக மாறுவது மிகவும் மோசமான ஒன்று. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மரணத்திற்கு நீதிக்கிடைப்படை உறுதிப்படுத்துமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.