ராம ராஜ்ஜியம் எனச்சொன்னீர்கள், ஆனால் வந்தது குண்டர் ராஜ்ஜியம்தான்- ராகுல்
உத்தரப்பிரதேசத்தில் ராம ராஜ்ஜியத்தை கொண்டுவரப் போவதாகக் கூறிய பாரதிய ஜனதா அரசால் குண்டர் ராஜ்ஜியத்தைத்தான் கொண்டுவர முடிந்தது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
अपनी भांजी के साथ छेड़छाड़ का विरोध करने पर पत्रकार विक्रम जोशी की हत्या कर दी गयी। शोकग्रस्त परिवार को मेरी सांत्वना।
वादा था राम राज का, दे दिया गुंडाराज।
— Rahul Gandhi (@RahulGandhi) July 22, 2020
இதுதொடர்பாக இந்தி மொழியில் ட்விட்டரல் பதிவிட்டிருக்கும் அவர், கிரிமினல்களால் காஸியாபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது சகோதரியின் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பாக விக்ரம் சிங், கடந்த 16ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதுபோன்ற சூழலில், கடந்த திங்கள்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் நெற்றியில் சுடப்பட்ட விக்ரம் ஜோஷி, சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.