விரைவில் குணமடைவீர்கள்! அமித்ஷாவுக்கு ராகுல் ட்விட்
கொரோனா இந்தியாவை நான்கு மாதங்களாக பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த நாள் வரை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் முழு தீவிரத்துடன் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டறிய முயற்சி எடுத்து வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்ற வாரம் கோவாக்ஸின் மருந்து 30 வயது இளைஞர் உடலுக்குள் செலுத்தி பரிசோதனை செயய்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் முக்கியப் பொருப்புகளில் இருப்பவர்களுக்கு கொரோனா பரவுவது அச்சத்தை அதிகரிக்கிறது. தமிழகத்தில் பல அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா தொற்றால் அவதியுற்றனர். அமைச்சர் செல்லூர் ராஜீ மிகச் சமீபமாகத்தான் கொரோனாவிலிருந்து பூரண குணம் அடைந்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமித்ஷாவின் உடல் இயல்பாக இருந்தாலும் நோய்த் தொற்று உறுதியானதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டிருக்கிறார். இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவு செய்திருக்கிறார்.
அமித்ஷா விரைவில் குணமடைய விரும்புவதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி பதிந்துள்ளார்.
Wishing Mr Amit Shah a speedy recovery.
— Rahul Gandhi (@RahulGandhi) August 2, 2020