முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு… ராகுல் காந்தி ட்வீட்!

 

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு… ராகுல் காந்தி ட்வீட்!

தமிழகத்தை வளமான மாநிலமாக உருவாக்க திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக முதன்முறையாக டெல்லி சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தடுப்பூசி தட்டுப்பாடு, நீட்தேர்வு, ஹைட்ரோகார்பன், ஜிஎஸ்டி நிலுவை தொகை, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி மோடியுடன் முதல்வர் பேசியதாக தகவல்கள் வெளியானது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன் உடன் சென்றிருந்தார்.

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு… ராகுல் காந்தி ட்வீட்!

அரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு, முதல்வர் இல்லத்துக்கு திரும்பிய ஸ்டாலின் இரவு அங்கேயே தங்கி விட்டார். இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். ராகுல் காந்தியையம் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.கஸ்டாலினை தானும் சோனியா காந்தியும் சந்தித்து பேசியதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வளமான, வலிமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற திமுகவுடன் தொடர்ந்து காங்கிரஸ் செயல்படும் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.