“விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன் ராகுல் ஜி” – பிரதமர் மோடி வாழ்த்து!

 

“விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன் ராகுல் ஜி” – பிரதமர் மோடி வாழ்த்து!

கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை வீரியமாக இருப்பதால் ஏராளமான திரைப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரான மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன் ராகுல் ஜி” – பிரதமர் மோடி வாழ்த்து!

இச்சூழலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி கொரோனாவிலிருந்து குணம்பெற அரசியல் கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து சொல்லியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி விரைவில் குணம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.