உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு. பா.ஜ.க.வை தாக்கிய ராகுல் காந்தி..

 

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு. பா.ஜ.க.வை தாக்கிய ராகுல் காந்தி..

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை சுட்டி காட்டி பா.ஜ.க.வை ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கொலையான சம்பவம் நாடே உலுக்கியது. இந்த சூழ்நிலையில், அண்மையில் உத்தர பிரதேசத்தில் லக்கிம்புாகேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்துக்கு சென்று பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை வெளியே அழைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு. பா.ஜ.க.வை தாக்கிய ராகுல் காந்தி..
ராகுல் காந்தி

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை, பிரதமர் மோடியின் மகளை காப்போம் வாசகத்தை பயன்படுத்தி பா.ஜ.க.வை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், எப்படி தொடங்கியது: மகளை காப்போம், எப்படி போகிறது: குற்றவாளிகளை காப்போம் என பதிவு செய்து இருந்தார்.

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு. பா.ஜ.க.வை தாக்கிய ராகுல் காந்தி..
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

அதனுடன், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. காவல் நிலையம் சென்று பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டநபரை அழைத்து வந்த செய்தியின் பதிவேற்றம் செய்து இருந்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக ராகுல் காந்தி அடிக்கடி விமர்சனம் செய்வது குறிப்பிடத்தக்கது.