சூறாவளி பிரச்சாரம் : சிறுமியுடன் ராகுல் காந்தி செல்ஃபி!

 

சூறாவளி பிரச்சாரம் : சிறுமியுடன் ராகுல் காந்தி செல்ஃபி!

கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சிறுமியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

சூறாவளி பிரச்சாரம் : சிறுமியுடன் ராகுல் காந்தி செல்ஃபி!

‘வா.. ஒரு கை பார்ப்போம்’ என்று தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. 3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த அவர் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று கரூரில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

சூறாவளி பிரச்சாரம் : சிறுமியுடன் ராகுல் காந்தி செல்ஃபி!

கரூர் சின்னதாராபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், சீனா என்ற வார்த்தையை சொல்லக் கூட மோடி பயப்படுகிறார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததன் முழு காரணம் மோடி தான். விவசாயத்தை மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விட்டார் என மத்திய பாஜக அரசை கண்டித்து கடுமையாக பேசினார். மேலும், சீன ராணுவத்துக்கு மோடி தாரவாத்து வருகிறார் என்றும் எல்லை பிரச்னை குறித்து பேச அவருக்கு தைரியம் இல்லை என்றும் விமர்சித்தார்.

சூறாவளி பிரச்சாரம் : சிறுமியுடன் ராகுல் காந்தி செல்ஃபி!

அச்சமயம், ராகுல் காந்தியின் வாகனத்திற்கு கீழ் நின்று கொண்டு ஒரு சிறுமி செல்ஃபி எடுக்க முயன்றதை கவனித்தார். உடனே அங்கிருந்த நபர்களிடம் கூறி, சிறுமியை கை கொடுத்து வாகனத்தின் மீது ஏற்றி செல்ஃபி எடுத்துக் கொண்டார். மேலும், அந்த சிறுமியின் கண்ணத்தில் கை வைத்து அழகாக கொஞ்சினார். அந்த புகைப்படங்களை காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அவை தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.