மோடி அரசுக்கு போராடும் விவசாயிகள் காலிஸ்தானி, முதலாளிகள் நண்பர்கள்…. ராகுல் காந்தி தாக்கு

 

மோடி அரசுக்கு போராடும் விவசாயிகள் காலிஸ்தானி, முதலாளிகள் நண்பர்கள்…. ராகுல் காந்தி தாக்கு

பிரதமர் மோடி அரசுக்கு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானி அதேசமயம் கார்ப்பரேட் முதலாளிகள் நண்பர்கள் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் குறைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். மேலும், பொருளாதார மந்த நிலை, வேலையின்மை, வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை குறித்தும் ராகுல் காந்தி தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

மோடி அரசுக்கு போராடும் விவசாயிகள் காலிஸ்தானி, முதலாளிகள் நண்பர்கள்…. ராகுல் காந்தி தாக்கு
பிரதமர் மோடி

ராகுல் காந்தி டிவிட்டரில், மோடி அரசுக்கு: கருத்து வேறுபாடு கொண்ட மாணவர்கள் தேச விரோதிகள். கவலையுள்ள (நாட்டைப்பற்றி) குடிமக்கள் நகர்புற நக்சல்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கோவிட் கேரியர்கள். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் யாரும் இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானி. குரோனி முதலாளிகள் சிறந்த நண்பர்கள் என்று பதிவு செய்து இருந்தார்.

மோடி அரசுக்கு போராடும் விவசாயிகள் காலிஸ்தானி, முதலாளிகள் நண்பர்கள்…. ராகுல் காந்தி தாக்கு
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் வரும் விவசாயிகளில் சிலர் இறந்த விவகாரத்திலும் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சனம் செய்து இருந்தார். 3 விவசாய சட்டங்களை அரசாங்கத்தால் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு இன்னும் எத்தனை தியாகங்களை செய்ய வேண்டும் என்று டிவிட்டரில் ராகுல் காந்தி பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.