பல கோடி வேலையில்லாமல் இருப்பதற்கு மோடி அரசு மட்டுமே பொறுப்பு.. ராகுல் காந்தி

 

பல கோடி வேலையில்லாமல் இருப்பதற்கு மோடி அரசு மட்டுமே பொறுப்பு.. ராகுல் காந்தி

நாட்டில் பல கோடி பேர் வேலையில்லாமல் இருப்பதற்கு மோடி அரசு மட்டுமே பொறுப்பு என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல், கொரோனா நிர்வாகம். வேலையின்மை, பொருளாதார வளர்ச்சி, எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

பல கோடி வேலையில்லாமல் இருப்பதற்கு மோடி அரசு மட்டுமே பொறுப்பு.. ராகுல் காந்தி
பிரதமர் மோடி

தற்போது கொரோனா வைரஸின் 2வது அலை காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் காரணமாக பல கோடி பேர் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். ஆலைகள் மட்டுமின்றி நிறுவனங்களும் திறக்கப்படாததால் வேலையில்லாமல் பல கோடி பேர் தவித்து வருகின்றனர்.

பல கோடி வேலையில்லாமல் இருப்பதற்கு மோடி அரசு மட்டுமே பொறுப்பு.. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இப்போது பல கோடி பேர் வேலையில்லாமல் இருப்பதற்கு மோடி அரசு தான் காரணம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், இப்போது பல கோடி வேலையில்லாமல் உள்ளனர், இதற்கு யார் பொறுப்பு?. மோடி அரசு மட்டுமே! என்று பதிவு செய்துள்ளார்.