சாலையோரத்தில் நின்று… நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி!

 

சாலையோரத்தில் நின்று… நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி!

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்திருக்கும் ராகுல் காந்தி, சாலையோரம் நின்று நுங்கு சாப்பிட்ட சம்பவம் காங்கிரசார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தென்மாவட்டங்களில் 3ம் கட்ட பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று முன்தினம் ராகுல்காந்தி தமிழகம் வந்தார். தூத்துக்குடி மற்றும் நெல்லையில் இரண்டு நாட்கள் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், பாஜகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து அதிரடியாக பேசினார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை கன்னியாகுமரிக்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு 2ம் நாளாக தனது பிரச்சாரத்தை தொடருகிறார்.

சாலையோரத்தில் நின்று… நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி!

மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் அகஸ்தீஸ்வரம் இல்லத்துக்கு சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட ராகுல், நாகர்கோவில் செல்லும் வழியில் சாலையோரத்தில் இருந்த நுங்கு கடைக்கு முன் காரை நிறுத்தினார். அங்கு நுங்கு விற்பனை செய்துக் கொண்டிருந்த பெண்ணிடம், நுங்கு தரச்சொல்லி அதனை விரும்பி சாப்பிட்டார். தேசிய கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாலையோரத்தில் நின்று நுங்கு சாப்பிட்டது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சாலையோரத்தில் நின்று… நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி!

ராகுல் காந்தியின் இந்த எளிமையான முகம் புதிதல்ல. அண்மையில் பரப்புரைக்காக தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி, யூ டியூப் சேனல் நடத்தி வரும் கிராமத்தினருடன் ஒன்றாக தரையில் அமர்ந்து சாப்பிட்டதையும் விவசாயிகளுடன் ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிட்டதையும் மறக்க முடியுமா..!