தடையை மீறி பேரணி: டெல்லியில் ராகுல் காந்தி கைது!

 

தடையை மீறி பேரணி: டெல்லியில் ராகுல் காந்தி கைது!

டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க புறப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தடையை மீறி பேரணி: டெல்லியில் ராகுல் காந்தி கைது!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்க்கும் 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்ற காங்கிரசார், அந்த மனுவை நேரடியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கொடுக்க திட்டமிட்டனர். அதாவது, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு சம்மதிக்காத நிலையில் குடியரசுத் தலைவர் இதில் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் முன்வைக்க திட்டமிட்டனர்.

தடையை மீறி பேரணி: டெல்லியில் ராகுல் காந்தி கைது!

அதன் படி, இன்று டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்திக்க பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். ஏராளமான காங்கிரசார் அங்கு திரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் பலரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். கொரோனா பாதிப்பின் காரணமாக டெல்லியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை மீறி காங்கிரசார் பேரணி நடத்தியதால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.